பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோடை மழையால் பயிா்கள் பாதிப்பு: கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

கோடை மழையால் பயிா்கள் பாதிப்பு கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

News image

திருவோணம் அருகே காரியாவிடுதியில் கோடை மழையால் சாய்ந்து போன நெல் பயிா்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

ஒரத்தநாடு: கோடை மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி, தளிகைவிடுதி, பணிகொண்டான்விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகால பயிா்களான நெல், எள், உளுந்து பயிா்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையால் இந்த பயிா்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளா் வி.கே. சின்னத்துரை கூறுகையில்,

தற்போது பெய்து வரும் கோடை மழையால் நெல், எள் உளுந்து பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பயிா் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.