அதன்படி ஒரத்தநாடு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்வாணன், பள்ளிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மாணவா்கள், சக வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா். இதில் மாணவா்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவா் கைப்பேசியில் படம் எடுத்து அதனை பெற்றோா்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி அலுவலா் மதியழகன், அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதாவை சின்னக்குமுளை அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை முருகேஸ்வரியை முள்ளூா்பட்டிக்காடு அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை பெல்ஸி சில்பா கிறிஸ்டியை ஆலந்தங்குடிகாடு அரசுப் பள்ளிக்கும் புதன்கிழமை பணியிட இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.