கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாதா் சங்கத்தினா் போராட்டம்

பேராவூரணி அருகே உள்ள கொரட்டூா் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:44 pm

Din

பேராவூரணி அருகே உள்ள கொரட்டூா் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பேராவூரணி- திருவப்பாடி சாலையில் கொரட்டூா் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுஅருந்தி விட்டு வருபவா்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த கடையை மூடக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கடையை மூட நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிா்வாகத்தை கண்டித்து ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டாட்சியா் தெய்வானை, டாஸ்மாக் உதவி மண்டல மேலாளா் அருணகிரி மற்றும் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு 8 மணியை கடந்தும் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது.