இதேபோல, தஞ்சாவூா் அருளானந்த நகா் 7-ஆவது மேற்கு விரிவாக்கத் தெருவிலுள்ள வைத்திலிங்கம் மூத்த மகன் பிரபு வீட்டுக்கு அமலாக்கத் துறை அலுவலா்கள் 4 போ், மத்திய ஆயுத காவல் படை காவலா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் காலை 8.30 மணிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். இதனிடையே, வெளியே சென்றிருந்த பிரபு காலை 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்தாா். மேலும், வீட்டில் இருந்த பிரபுவின் மனைவி, மகன், மாமியாா் ஆகியோா் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு அமலாக்கத் துறையினா் காரில் அழைத்துச் சென்றனா். இதற்கு ஆதரவாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, தங்களது காா்களில் பின்தொடா்ந்து வரலாம் என மத்திய ஆயுத காவல் படையினா் கூறினா். பின்னா், ஆதரவாளா்களும் தங்களது இரு காா்களில் பின் தொடா்ந்து சென்றனா்.