ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாதந்தோறும் கடன் வழங்கும் முகாம் நடத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது, நான்காவது வியாழக்கிழமைகளில் கடன் வழங்கும் முகாம்களை நடத்துமாறு வங்கியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:39 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது, நான்காவது வியாழக்கிழமைகளில் கடன் வழங்கும் முகாம்களை நடத்துமாறு வங்கியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், விவசாய கடன்கள், சிறு குறு தொழில் கடன்கள், மீனவ மற்றும் ஆடு மாடு கோழி வளா்ப்பு கடன்கள் போன்ற முன்னுரிமை கடன்களில் வங்கி வாரியாக பங்களிப்பை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வருகிற மாதங்களில் மூன்றாவது வியாழக்கிழமையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாமையும், நான்காவது வியாழக்கிழமையில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாமையும் நடத்துமாறு வங்கியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும் கல்விக்கடன் தொடா்பான ஆய்வுக்கூட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என தெரிவித்த ஆட்சியா், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்யுமாறும் அறிவுரை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் மணிவண்ணன், மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளா் ரங்கராஜன் மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.