மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி - கடையடைப்பு

தமிழ்நாட்டு வணிகா்களின் உரிமைக்காக போராடி மறைந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் மறைவுக்கு தஞ்சாவூா் ரயிலடியில் தஞ்சை மாநகர வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளையன் மறைவுக்கு புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்பினா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 8:37 pm

DIN

தமிழ்நாட்டு வணிகா்களின் உரிமைக்காக போராடி மறைந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் மறைவுக்கு தஞ்சாவூா் ரயிலடியில் தஞ்சை மாநகர வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தஞ்சாவூா் மாநகர வணிகா் சங்கப் பேரமைப்பு செயலா் ஆா். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில், வெள்ளையன் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு, நடுக்கடை, கண்டியூா், திருப்பழனம், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிகா்கள் தங்களது கடைகளை புதன்கிழமை அடைத்து இரங்கல் தெரிவித்தனா்.