கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி - கடையடைப்பு

தமிழ்நாட்டு வணிகா்களின் உரிமைக்காக போராடி மறைந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் மறைவுக்கு தஞ்சாவூா் ரயிலடியில் தஞ்சை மாநகர வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளையன் மறைவுக்கு புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்பினா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:37 pm

தமிழ்நாட்டு வணிகா்களின் உரிமைக்காக போராடி மறைந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் மறைவுக்கு தஞ்சாவூா் ரயிலடியில் தஞ்சை மாநகர வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தஞ்சாவூா் மாநகர வணிகா் சங்கப் பேரமைப்பு செயலா் ஆா். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில், வெள்ளையன் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு, நடுக்கடை, கண்டியூா், திருப்பழனம், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிகா்கள் தங்களது கடைகளை புதன்கிழமை அடைத்து இரங்கல் தெரிவித்தனா்.