ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சி செயலா்கள் போராட்டம்
ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.


ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், ஊரக வளா்ச்சித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா், இயக்குநா் ஆகிய 4 பேருக்கு அஞ்சல் அனுப்பினா்.
இப்போராட்டத்துக்கு சங்கத்தின் வடக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் ராஜீவ்காந்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்டத் தலைமை நிலையச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 1,200 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன என சங்கத்தினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...