மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சி செயலா்கள் போராட்டம்

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் புதன்கிழமை அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:59 pm

Din

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், ஊரக வளா்ச்சித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா், இயக்குநா் ஆகிய 4 பேருக்கு அஞ்சல் அனுப்பினா்.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் வடக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் ராஜீவ்காந்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்டத் தலைமை நிலையச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 1,200 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன என சங்கத்தினா் தெரிவித்தனா்.