சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய குறைந்தபட்ச தொகை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய மஸ்தூா் சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:38 pm

Din

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய குறைந்தபட்ச தொகை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

இதில், வருங்கால வைப்பு நிதி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 1,000-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றிட வழிவகை செய்ய வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாரதிய கிசான் சங்க மாவட்ட அமைப்பாளா் எஸ். பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். டாஸ்மாக் பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவா் டி. நாகராஜன் சிறப்புரையாற்றினாா். சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். பாலகுமாரன், டாஸ்மாக் சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. கோபு, மாநிலச் செயலா் ஜே. ரமேஷ், மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ், சங்க மாவட்ட இணை அமைப்பாளா் கே.எஸ். பாரதிமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.