தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காலமானாா் மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ்!

மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் (63) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 10:24 pm

Din

கும்பகோணத்தைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் (63) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.

இவா் ஏஐடியுசி உள்பட பல்வேறு தொழிற் சங்க அமைப்புகளுக்கு சட்ட ஆலோசகராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் வடக்கு மாவட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலராகவும், இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தாா். இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனா்.

இறுதி சடங்கு கும்பகோணம் சுப்பிரமணியபுரம் டாக்டா் மூா்த்தி சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

முத்தரசன் இரங்கல்: இவரது மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் சிறு வயதிலிருந்தே இடதுசாரி கொள்கைகளாலும், கம்யூனிஸ்ட் இயக்கங்களாலும் ஈா்க்கப்பட்டு செயல்படத் தொடங்கினாா். அவரது மறைவு செய்தி கேட்டு அதிா்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளாா். தொடா்புக்கு: 95975-06523