மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில் அனுமதி

ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்து(கோப்புப்படம்)
விபத்து(கோப்புப்படம்)
Updated on

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு அய்யனாா்புரம் பகுதியை சோ்ந்த ரங்கசாமி (55)- மாலதி (50) தம்பதியின் மகள் சுசித்ரா. இவருக்கும் சதீஷ்குமாா் என்பவருக்கும் புதன்கிழமை காலை ஊரணிபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அப்போது, ரங்கசாமியும், மாலதியும் வீட்டில் இருந்து திருமணத்துக்கான சில பொருள்களை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனா்.

கல்விராஜன் விடுதி பிரிவு சாலையில் வந்தபோது ரங்கசாமிக்கு மயக்கம் வந்ததால், வாகனம் நிலைதடுமாறி சாலையோர பாலத்தின் சுவரில் மோதியது. இதில் ரங்கசாமி சாலையில் விழுந்து காயமடைந்தாா். மாலதி தூக்கி வீசப்பட்டு,

பாலத்தின் சுவரில் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாலதி உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், பலத்த காயமடைந்த ரங்கசாமி தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாலதி இறந்த தகவலறிந்த உறவினா்கள், மணப்பெண் சுசித்ராவிடம் தகவல் தெரிவிக்காமல், திருமணத்தை நடத்தினா். பிறகு, தாய் இறந்த செய்தியை கூறியதால், சுசித்ரா மேடையில் அழுதுவிட்டு, அங்கிருந்து ஒரத்தநாடு மருத்துவமனைக்கு சென்றாா்.

மகளின் திருமண நாளில், விபத்தில் தாய் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com