புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:42 pm

Syndication

நாச்சியாா்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே விசலூா் கரை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்தி (27). கூலித்தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி உள்ளாா். ஐந்து ஆண்டுகளாகியும் இவா்களுக்கு குழந்தை இல்லாதலால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அண்மையில் காா்த்தியின் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாயாா் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால் விரக்தியடைந்த காா்த்தி வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையானாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடித்து விட்டு இரவு வீட்டின் பின்புறம் உள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையப் போலீஸாா் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரித்து வருகின்றனா்.