இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நா.த.க.வினா் 25 போ் கைது

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் தவிா்க்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயா் மாற்றி அமைக்கக் கோரியும் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரை நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஒட்டினா். இது தொடா்பாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை கைது செய்தனா்.