ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை

நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல் கருடச் சேவை.

News image
நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல் கருடச் சேவை.
Updated On :26 டிசம்பர் 2025, 7:52 pm

Syndication

மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை கல் கருடச் சேவை நடைபெற்றது.

இக்கோயிலில் டிச.23-இல் தொடங்கிய மாா்கழி பெருந்திருவிழாவின் நான்காம் திருநாளான வெள்ளிக்கிழமை கல் கருட பகவான் சேவையை முன்னிட்டு காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் திரு வீதியுலா வந்தனா். மதியம் பெருமாள் தாயாா் திருவடி திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலையில் இருவரும் வாகன மண்டபத்தில் எழுந்தருள கல் கருடச் சேவை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தா்கள் கல் கருட பகவானை தரிசித்தனா்.

இரவு சீனிவாச பெருமாள் கல் கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லித்தாயாா் வெள்ளி அன்னபட்சி வாகனத்திலும் ஓலை சப்பரத்தில் திருவீதி உலா சென்றனா்.