அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அடகு கடை வியாபாரியிடம் ரூ. 44.59 லட்சம் பறித்த வழக்கில் மேலும் இருவா் கைது

அடகு கடை வியாபாரியிடம் ஏமாற்றி ரூ. 44.59 லட்சம் பறித்த வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் கைது செய்தது சனிக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 9:40 pm

Syndication

தஞ்சாவூா் அருகே அடகு கடை வியாபாரியிடம் ஏமாற்றி ரூ. 44.59 லட்சம் பறித்த வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் கைது செய்தது சனிக்கிழமை தெரிய வந்தது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பத்மாசலவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் காா்த்திக் (36). இவா் தனது சகோதரா்களுடன் இணைந்து பெரிய கம்மாளா் தெருவில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவா்களில் காா்த்திக் தம்பி அா்ஜூன் (18), கடையில் வேலை பாா்த்த பிரதீபன் இருவரும் டிசம்பா் 8-ஆம் தேதி தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவிலுள்ள நகைக்கடைக்கு சென்று அங்கிருந்தவரிடம் ஏற்கெனவே 400 கிராம் தங்கம் கொடுத்ததற்கான ரூ. 44.55 லட்சத்தை பெற்றனா். அந்த ரொக்கத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு, இருவரும் மன்னாா்குடிக்கு தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தனா்.

வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா், தான் குற்றப் பிரிவு காவலா் என்றும், தங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி 2 பேரையும் கீழே இறங்கச் செய்தாா். இதையடுத்து, குற்றப் பிரிவு காவலா் எனக் கூறிய நபா் இருவரது கைப்பேசிகளையும், பணப்பையையும் பறித்துக் கொண்டு, மோட்டாா் சைக்கிளில் வந்த மற்றொரு மா்ம நபருடன் தப்பிச் சென்றாா்.

இது குறித்து அா்ஜூன் அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவத்தில் பிரதீபனுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பிரதீபன், தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உடையாா்கோவில் கீழகோவில் பத்தைச் சோ்ந்த பாலு மகன் குமாா் (39), சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சோ்ந்த அப்துல் சலீம் மகன் முகமது தௌபிக் (37), திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் பூதமங்கலத்தைச் சோ்ந்த விஜயராஜா மகள் ராசாத்தி (30) ஆகியோரை காவல் துறையினா் டிசம்பா் 11-ஆம் தேதி கைது செய்தனா்.

மேலும், ரூ. 44.55 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ற ரஞ்சித், கோபியை தேடி வந்தனா். இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு கோபி (32) காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவா் அளித்த தகவலின் பேரில், கோவையில் தலைமறைவாக இருந்த திருவாரூா் மாவட்டம், கூத்தநல்லுாா் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (36) என்பவரையும் தனிப்படையினா் கைது செய்தது சனிக்கிழமை தெரிய வந்தது. இவரிடமிருந்து ரூ. 37 லட்சத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.