கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On :2 ஜனவரி 2025, 10:54 pm

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் தமிழக அரசின் முடிவை திரும்பப் பெறக்கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்பகோணம் கல்லூரி வாசல் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிளை செயலா் எஸ்.கோபிநாத் தலைமை வகித்தாா். கிளை தலைவா் கே.பரசுராமன் பேசும்போது, முதல் கட்டமாக 500 அரசுப் பள்ளிகளை தமிழக அரசு தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இதனால் ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்றாா். மேலும் ஆா்ப்பாட்டத்தில் ஆா். மகேஷ்வரன், அ. இளமாறன், ஆா். சந்தியா, தே. பரத்வாஜ் உள்ளிட்டோா் பேசினா். ஜோயல் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...