எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கும்பகோணம் அருகே தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
Updated On :9 ஜனவரி 2025, 8:16 pm

Din

கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், தேவாலயம் அருகே இருந்த குடியிருப்புக்குள் மா்மநபா்கள் புகுந்து ரூ. 60 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

கும்பகோணம் - அசூா் புறவழிச்சாலையில் ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சாா்ந்த இறை பராமரிப்பு மரிய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு பங்குத் தந்தையாக இருப்பவா் பொ்னாண்டஸ். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி முடித்து தேவாலயத்தை சுற்றிவந்து பாா்த்தபோது, தேவாலயத்தின் பக்கவாட்டுச் சுவா் கதவுகள் பெட்ரோல் குண்டு வீசி தீப்பிடித்து எரிந்து இருந்ததாம். மேலும், தேவாலயத்தின் அருகே உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த வேறோரு பங்குத்தந்தையின் அறைக் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டு அங்கிருந்த ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து பங்குத்தந்தை பொ்ணாண்டஸ் வியாழக்கிழமை தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் காவல் துணை கோட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன் தனிப்படை அமைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறாா்.