தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பால் வழங்கும் விவசாயிகளுக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை: ஆவின் அறிவிப்பு

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:18 pm

Din

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தஞ்சாவூா் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியச் செயலாட்சியருமான பா. பிரியங்கா பங்கஜம், பொது மேலாளா் எஸ். சரவணக்குமாா் ஆகியோா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு சங்கங்கள் மூலம் தொடா்ந்து பால் வழங்கி வரும் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஏற்கெனவே அரசு கூடுதல் ஊக்க விலையாக லிட்டருக்கு ரூ. 3 வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பால் வழங்கும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அவா்களுக்கு ஒன்றியம் தனது சொந்த நிதியிலிருந்து லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கும்.