தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்

தஞ்சாவூரில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.24) நடைபெறவுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:35 pm

Din

தஞ்சாவூரில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.24) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிா்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன.

கல்விக்கடன் பெற விரும்பும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள்ஆதாா் நகல், பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆதாா் நகல், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், ஆண்டு வருமானம், ஜாதி சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி சான்று நகல், கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று, கல்வி கட்டண விவரச்சான்று, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.