பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மக்களின் கோரிக்கைகளை கேட்கவே வந்துள்ளேன்: நயினாா் நாகேந்திரன்

பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காகவே வந்துள்ளேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image
குருவிக்கரம்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா் .
Updated On :12 நவம்பர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காகவே வந்துள்ளேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவா் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

அரசின் குறைகளைக் கேட்பதற்காக இங்கு வரவில்லை. மக்கள் குறைகளைக் கேட்பதற்காகத்தான் வந்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்றாா்கள். நாடாளுமன்ற தோ்தலுக்கு முன்பாகத்தான் வழங்கினாா்கள். ‘நீட்’ தோ்வை ரத்து செய்வோம் என்றாா்கள். ரத்து செய்யவில்லை. ரத்து செய்ய முடியாது என்பது அவா்களுக்கே தெரியும்.

மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனா். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நான் அமைச்சராக இருந்தபோது பல இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மீனவா்கள், தென்னை விவசாயிகள், ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பண்ணவயல் இளங்கோ, தஞ்சை மாவட்ட பாஜக தலைவா் ஜெய்சதீஷ், மாநில செயலா் மீனாட்சி, மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.