சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் தூய்மைப் பணி முகாம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

உலக பாரம்பரிய வார விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சாா்பில் மரபு நடை மற்றும் தூய்மைப் பணி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் துணைத் தொல்லியல் கண்காணிப்பாளா் பா. அறவாழி, உதவிக் கண்காணிப்பாளா் முத்துகுமாா், பராமரிப்பு அலுவலா் பொ.க. சுரேஷ் பாபு ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், ஏராளமான சமூக ஆா்வலா்கள், சிவனடியாா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்டு பெரிய கோயில் வளாகத்தில் குப்பைகள் மற்றும் புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

மேலும் ஒவ்வொருவரும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த உலக பாரம்பரிய வார விழா நவம்பா் 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.