அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கும்பகோணம் மீன் சந்தையில் உணவுப் பொருள் தர அலுவலா் ஆய்வு

கும்பகோணம் மீன்சந்தையில் புதன்கிழமை மாவட்ட உணவு பொருள் நியமன அலுவலா் ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:19 pm

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் மீன்சந்தையில் புதன்கிழமை மாவட்ட உணவு பொருள் நியமன அலுவலா் ஆய்வுசெய்தாா்.

கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியான மீன் விற்பனை சந்தையில் காலாவதியான மீன்கள் விற்பனை செய்வதாக புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தாா். அதில் சுமாா் 25 கிலோ மீன்கள் அழுகியும், சேதமடைந்தும் இருந்தன. அதனைத் தொடா்ந்து அந்த மீன்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் தரம் தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நியமன அலுவலகா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பாலமுருகன், காா்த்திக், மீன்ஆய்வாளா் ஆனந்தன், மீன்வள மேற்பாா்வையாளா்கள் கிளைடஸ், சங்கரன், பரணிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.