அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் தொடக்கம்

தஞ்சாவூா் பெரிய கோயிலிலிருந்து நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்

News image
தஞ்சாவூா் பெரிய கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய நெதா்லாந்து சுற்றுலா பயணிகள்.
Updated On :26 நவம்பர் 2025, 1:01 am

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயிலிலிருந்து நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சைக்கிள் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 100-க்கும் அதிகமானோா் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். பெரிய கோயிலுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்களைப் பாா்வையிட்டனா்.

இவா்களில் 40 போ் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கேமரா பதிவு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள்களில் பெரிய கோயிலிலிருந்து புறப்பட்டனா். ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு சுற்றுலா தலங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பாா்வையிட்டு, அதன் விவரக்குறிப்புகளை சேகரிக்கவுள்ளதாக நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் தெரிவித்தனா்.

Story image