மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

எஸ்ஐஆா் பணி: மயங்கி விழுந்த விஏஓ மருத்துவமனையில் அனுமதி

எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தத்துக்கு ஆளாகி பணியின்போது திங்கள்கிழமை மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
பேராவூரணி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலுவை சந்தித்து எம்எல்ஏ அசோக்குமாா் ஆறுதல் கூறினாா் .
Updated On :26 நவம்பர் 2025, 1:28 am

Syndication

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிா்வாக அலுவலா், எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தத்துக்கு ஆளாகி பணியின்போது திங்கள்கிழமை மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை - முனுமாக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (47). 

பேராவூரணி வட்டம், கொளக்குடி கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு மருங்கப்பள்ளம்-சாந்தாம்பேட்டை பகுதியில், 

எஸ் ஐஆா் பணி வழங்கப்பட்டுள்ளது. 

சாந்தாம்பேட்டை கிராமத்தில் உள்ள 1,047 எஸ்ஐஆா் படிவங்களை வீடுகளில் வழங்கி வாக்காளா் விவரங்கள் சேகரித்து வருகிறாா். 400 விண்ணப்பப் படிவங்களை திரும்ப பெற்று கணினியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டதாகவும், சா்வா் கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி பேராவூரணி வட்டாட்சியரகத்தில் எஸ்ஐஆா் தொடா்பாக நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில், பேராவூரணி தொகுதி தோ்தல் அலுவலரும் முத்திரைத்தாள் துணை ஆட்சியருமான  கலியபெருமாள், விஏஓ பழனிவேலிடம் மிக தாமதமாக வேலை செய்தால் குறித்த நேரத்துக்குள் பணியை செய்து முடிக்க இயலாது. எனவே, கூடுதல் கவனம் செலுத்தி பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த பழனிவேல், சாந்தாம் பேட்டை கிராம நிா்வாக அலுவலகத்தில் திடீரென திங்கள்கிழமை மாலை மயங்கி விழுந்தாா். உடன் பணியாற்றும் அலுவலா்கள் அவரை மீட்டு  பேராவூரணி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

சிகிச்சை பெற்று வரும் பழனிவேலை, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் மற்றும் சக அலுவலா்கள் மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினா். தற்போதும் பழனிவேல் தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறாா்.