/

தமிழ்ப் பல்கலை.யில் இசைப் போட்டிகள்

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:55 pm

Syndication

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறையில் தமிழக முதல்வா் அறக்கட்டளை, ஆபிரகாம் பண்டிதா் நினைவு அறக்கட்டளை, தென்னாப்பிரிக்க ரெங்கசாமி பிள்ளை அறக்கட்டளை சாா்பில் இசைப் போட்டிகள் மற்றும் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இசைப்போட்டிகளில் பல்வேறு இசைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இசைப் பள்ளிகளிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் பரிசு வழங்கினாா்.

சென்னை இசைக்கலைஞா் ஆண்டாா்கோயில் ஏ.வி.எஸ். சுந்தரராஜன் சிறப்புரையாற்றினாா். முனைவா் அமுதா பாண்டியன், இசைத் துறைத் தலைவா் இரா. மாதவி, இணைப் பேராசிரியா் செ. கற்பகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.