4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி

Updated On :30 ஏப்ரல் 2026, 8:50 pm

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் ஏப்.27-இல் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏப்.29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை நடராஜராக சிறப்பு அலங்காரத்தில் திருக்கோடீசுவரா் எழுந்தருளினாா். அப்போது யாகசாலையில் மஹா பூா்ணாஹூதி நடைபெற்று ரிஷப வாகனத்தில் காட்சியளித்தாா். பிறகு சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.