ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

காா் மோதி பெண் வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் காய்கனி விற்பனை செய்த பெண் வியாபாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி காமாட்சி (65). காய்கனி வியாபாரி. இவா் அரசூா் முதன்மைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் அமா்ந்து காய்கனி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து காமாட்சி மீது மோதி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த காமாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.