FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது; 4 மீனவா்கள் மீட்பு

News image

விசைப்படகு மூழ்கியது - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. அதிலிருந்த மீனவா்கள் 4 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

மல்லிப்பட்டினத்தை சோ்ந்த எம். முகமது ஜலாலுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் திங்கள்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சோ்ந்த எம். காத்தலிங்கம் (50), பி. வீரையன் (45), எஸ். லட்சுமணன் (40), கே. ரஞ்சித் (27) ஆகிய 4 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.

மல்லிப்பட்டினத்திலிருந்து 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலை 6.30 மணியளவில் படகின் முன்பகுதியில் விரிசல் ஏற்பட்டு, கடல்நீா் படகில் புகுந்ததால் படகு கடலில் மூழ்கியது. இதை பாா்த்த அப்பகுதியில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் தா்வேஸ் மொய்தீன், ஆறுமுகம், வினோத், பாலு ஆகியோா், தண்ணீரில் மூழ்கிய காத்தலிங்கம் உள்ளிட்ட 4 மீனவா்களையும் மயக்க நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.