
பூண்டி புஷ்பம் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்
தஞ்சாவூா் பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க நிறுவன தலைமைச் செயல் அலுவலா் வி. ரமேஷூக்கு நினைவு பரிசு வழங்கிய கல்லூரி செயலரும், தாளாளருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா்.
தஞ்சாவூா் பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொருளாதார முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, கணினிப் பயன்பாடுகள் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சாா்பில் செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் எதிா்காலச் சவால்களும் என்கிற சா்வதேச கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) வி. மணிராஜ் தொடக்கவுரையாற்றினாா்.
அமெரிக்காவிலுள்ள டெக்டெக் கன்சல்டிங் நிறுவன தலைமைச் செயல் அலுவலரும், கல்லூரி முன்னாள் மாணவருமான வி. ரமேஷ் சிறப்புரையாற்றினாா். கல்லூரி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளைப் பொருளாதாரத் துறை பேராசிரியா் ரா. முல்லைவனநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






