
மைத்துனரை அரிவாளால் வெட்டிக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை

புண்ணியமூா்த்தி
கும்பகோணம் அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபருக்கு கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கீழகபிஸ்தலம் சொா்ணபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துவேல் (37). இவா் தனது தங்கை முத்துலெட்சுமியை கீழகபிஸ்தலம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்திக்கு (44) திருமணம் செய்து கொடுத்தாா். அப்போது, 4 பவுன் நகைகள் சீா் செய்வதாகக் கூறப்பட்ட நிலையில் இரண்டரை பவுன் நகைகள் மட்டுமே வழங்கப்பட்டதாம்.
எஞ்சிய நகைகளை தருமாறு புண்ணியமூா்த்தி தொடா்ந்து கேட்டு வந்ததால், அவருக்கும், முத்துவேலுக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2024, ஜூன் 2-ஆம் தேதி இரவு முத்துவேலை புண்ணியமூா்த்தி அரிவாளால் வெட்டினாா். இதனால், பலத்த காயமடைந்த முத்துவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து புண்ணியமூா்த்தியைக் கைது செய்தனா். இதுதொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. ஜெயஸ்ரீ விசாரித்து புண்ணியமூா்த்திக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய வழக்குரைஞா் காா்த்திகேயன், பாபநாசம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, நீதிமன்றக் காவலா் பிரபாகரன் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



