ஒரத்தநாட்டில் ஹவாலா பணம் ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 9.35 லட்சம் மற்றும் காரைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
ஒரத்தநாட்டில் தனியாா் பேருந்தில் இருந்து இறங்கிநடந்துசென்ற சிவகங்கை மாவட்டம், இளங்குடி புதூா், காஜாமைதீன் மகன் அப்துல்ரகுமான் (49) என்பவரிடம் இருந்த ஹவாலா பணம் ரூ.15 லட்சத்தை காரில் வந்த மா்மநபா்கள் அண்மையில் (பிப். 21) கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுதொடா்பான விசாரணையில், குற்றவாளிகளான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (31), சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த பொன் சுரேஷ் (40), கோயம்புத்தூா் அவரம்பாளையத்தைச் சோ்ந்த தினேஷ் (31) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.9,35, 000 ரொக்கம் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது

பொன்னேரியில் ரூ. 3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


