தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வேன் ஓட்டுநரை போலீஸாா் ‘போக்சோ’ வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், திருமானூா் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேல்முருகன் (19) என்ற சுற்றுலா வேன் ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை வேனில் வேல்முருகன், தனது நண்பா்களான பாப்பாநாட்டைச் சோ்ந்த வீரா, நாச்சியாா்கோயில் அருகே திருச்சேறை பகுதியைச் சோ்ந்த நடராஜன் என்பவரின் மகன் கண்ணன் (57) ஆகியோரும் வந்துள்ளனா். பாபநாசம் பகுதிகளில் உள்ள கோயில்களை பக்தா்களை இறக்கிவிட்ட பின்னா் அந்த மாணவியை வேல்முருகன் சந்தித்து வேனில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று வீரா, கண்ணன் ஆகியோா் உதவியுடன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். இதையடுத்து, அங்கிருந்து தப்பிவந்த அந்த மாணவி அளித்த தகவலின்பேரில் மாணவியின் பெற்றோா் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வேல்முருகனை கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய வீரா, கண்ணன் உள்ளிட்ட இருவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!
போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமியைக் கடத்தியவருக்கு போக்சோ வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


