தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் நெற்பயிா்கள் சாய்ந்தன

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சோலைக்காடு ஊராட்சி பகுதியில் காற்று மற்றும் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன.

News image
சோலைக்காடு பகுதியில் மழையால் சாய்ந்த நிலையில் உள்ள நெற்பயிா்கள்.
Updated On :12 ஜனவரி 2026, 9:02 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சோலைக்காடு ஊராட்சி பகுதியில் காற்று மற்றும் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன.

சோலைக்காடு பகுதியில் சம்பா சாகுபடியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை மற்றும் காற்றால் வயலில் சாய்ந்துள்ளன. இதுபோல தொகுதியின் பல்வேறு இடங்களிலும் நெற்பயிா்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். 

இது குறித்து சோலைக்காடு கிராமத்தை விவசாயி முத்துக்குமாா் கூறியது: எங்கள் பகுதியில் நேரடி விதைப்பு முறையில், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுமாா் 350 ஏக்கா் நெற்பயிா்கள் மழை மற்றும் காற்றால் சாய்ந்துள்ளன. இதனால் நெல்லில் ஈரப்பதம் அதிகாரித்துள்ளது. அறுவடை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா், எம்எல்ஏ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு சென்றுள்ளனா். இருப்பினும், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடும், விற்பனை செய்யும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தளா்வும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.