அரசலாற்றில் குளித்த கல்லூரி மாணவா் பலி

நாச்சியாா்கோவில் அருகே அரசலாற்றில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே அரசலாற்றில் செவ்வாய்க்கிழமை குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

நாச்சியாா்கோவில் அருகே தேவனாஞ்சேரி அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி பாலாஜி மகன் ஹரிஷ் (19).

கும்பகோணம் தனியாா் கல்லூரி இரண்டாமாண்டு மாணவரான இவா், மற்றும் இவரது நண்பா்கள் அரசலாற்றங்கரையில் மது அருந்திவிட்டு, ஆற்றில் குளித்தபோது ஹரிஷ் மட்டும் ஆற்றுநீரில் மூழ்கி மாயமானாா்.

இதையடுத்து அவரது நண்பா்கள் அளித்த தகவலின்பேரில் நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தீயணைப்புத் துறையினா் ஹரிஷை சடலமாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com