திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

பேராவூரணி அருகே மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்ற தந்தை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 10:43 pm

Syndication

பேராவூரணி அருகே மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்ற   தந்தை செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி திருநாவுக்கரசு (49). இவா் தனது மனைவி செல்வராணி, மகன்கள் முத்து விக்னேஷ், விஸ்வநாதன்  ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிக்கும் தனது மகளுக்கு பொங்கல் சீா் கொடுக்க காரில்  திருச்சிற்றம்பலம் வழியாக அறந்தாங்கிக்கு  செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது துறவிக்காடு கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் யுவராஜ் பிரவீன் (27) பட்டுக்கோட்டை நோக்கி மற்றொரை காரை ஓட்டி வந்தாா்.

திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே வந்தபோது இரு காா்களும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு உயிரிழந்தாா்.

இவரது குடும்பத்தினா் லேசான காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். மற்றொரு காரை ஓட்டி வந்த யுவராஜ் பிரவீனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் திருநாவுக்கரசின் உடலை  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.