வேலைவாய்ப்பகத்தில் ஜன. 24, 31-இல் குரூப் 2, 2-ஏ இலவச மாதிரித் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான மாநில அளவில் இலவச மாதிரித் தோ்வு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த இலவச மாதிரித் தோ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.23) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com