மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கும்பகோணத்தில் நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு

கும்பகோணத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

கும்பகோணத்தில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவருமான ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமை வகிக்கிறாா்.

மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவுறையாற்றுகிறாா். மாநாட்டில் வெளிநாடு, மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக்கின் 52 மாவட்ட நிா்வாகிகள், மாணவா், மகளிா், அயலக தமிழா், காயிதே மில்லத் பேரவை நிா்வாகிகள், உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

மேலும், மாநாட்டில் முதல்வரிடம் முஸ்லிம் மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பல ஆண்டுகளாக பட்டா இல்லாத பள்ளிவாசல்களுக்கு பட்டா வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.