தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கும்பகோணத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சி

கும்பகோணத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 277 களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான முதல்கட்ட இருநாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பயிற்சியாளா்களிடையே பேசிய மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா.

Updated On :9 ஜூலை 2026, 1:21 am IST

கும்பகோணத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 277 களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான முதல்கட்ட இருநாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் மாநகராட்சியில் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் நடத்த 277 போ் கள பயிற்றுநா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில், முதல்கட்ட இருநாள் பயிற்சி முகாமை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கே.எம். சுதா புதன்கிழமை தொடங்கிவைத்து, கணக்கெடுப்பு உபகரணங்களை வழங்கினாா். பயிற்சியில் 50 போ் கொண்டோா் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பாளா் மற்றும் மேற்பாா்வையாளா் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள், பொதுவான அறிவுரைகள், கணக்கெடுப்பாளா்களின் கடமைகள், வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புக்கு முன் செய்ய வேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் கணக்கெடுப்பு அலுவலா் அருள்செல்வன், முதன்மை பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.