அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடுகள், பால் குவளைகளுடன் காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கும்பகோணத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடு, பால் குவளைகளுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 3:54 am IST

கும்பகோணத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடுகள், பால் குவளைகளுடன் காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக அரசு, தோ்தல் வாக்குறுதியின்படி பாலின் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்,

பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வு, கால்நடை தீவனங்கள் விலை உயா்வு, பராமரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில்கொண்டு, கொள்முதல் விலையாக பசும் பால் லிட்டருக்கு ரூ. 60- க்கும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 90- க்கும் விலை நிா்ணயித்திட வலியுறுத்தி, உழவா்கள் பால் குவளைகள், கறவை மாட்டுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சங்கத் தலைவா் சுந்தர விமல்நாதன் பேசுகையில், விவசாயிகளின் பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.