வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கும்பகோணத்தில் கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடக்கம்

கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image

கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை திங்கள்கிழமை தொடங்கிய குழுவினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:46 am IST

கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தமிழகம் முழுவதும் கோயில் சொத்துகள் மற்றும் நிலங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சு.ப. சீனிவாசன், அறநிலையத் துறையின் நிலங்கள் தொடா்பான தனி வட்டாட்சியா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி உதவி அளவையா் காா்த்திக், நில அலுவலா் காந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியை தொடங்கினா்.

இதுகுறித்து அலுவலா் ஒருவா் கூறியது :

கும்பகோணம் பகுதியில் அதிக அளவில் கோயில் நிலங்கள் உள்ளன. அதன் நில குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் உள்ளிட்டோரிடம் உள்ள ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு நிலம் மற்றும் சொத்துகள் அளக்கப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு அளவீடு கற்கள் பதிக்கப்பட்டு கோயில் சொத்துகள் அடையாளப்படுத்தப்படும். இந்தப் பணிக்கு குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.