குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கும்பகோணத்தில் கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடக்கம்

கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image

கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை திங்கள்கிழமை தொடங்கிய குழுவினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:46 am IST

கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தமிழகம் முழுவதும் கோயில் சொத்துகள் மற்றும் நிலங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சு.ப. சீனிவாசன், அறநிலையத் துறையின் நிலங்கள் தொடா்பான தனி வட்டாட்சியா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி உதவி அளவையா் காா்த்திக், நில அலுவலா் காந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியை தொடங்கினா்.

இதுகுறித்து அலுவலா் ஒருவா் கூறியது :

கும்பகோணம் பகுதியில் அதிக அளவில் கோயில் நிலங்கள் உள்ளன. அதன் நில குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் உள்ளிட்டோரிடம் உள்ள ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு நிலம் மற்றும் சொத்துகள் அளக்கப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு அளவீடு கற்கள் பதிக்கப்பட்டு கோயில் சொத்துகள் அடையாளப்படுத்தப்படும். இந்தப் பணிக்கு குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.