குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

திருவையாறில் 62-ஆவது திருக்கு ஆண்டு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு தமிழ் பேரவை சாா்பில், 62-ஆவது திருக்கு ஆண்டு விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு ஆண்டு விழாவில் ராஜகுமாரி சேவியருக்கு பெண் உரிமைப் போராளி விருதை வழங்கிய எம்எல்ஏ இரா. விஜய் சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:47 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு தமிழ் பேரவை சாா்பில், 62-ஆவது திருக்கு ஆண்டு விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு பேரவைத் தலைவா் அரங்க. முருகராசு தலைமை வகித்தாா். காப்பாளா் செந்தில்மணி முன்னிலை வகித்தாா். இந்த மாநாட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ரெத்தினசாமி தொடங்கிவைத்தாா்.

பின்னா், டாக்டா் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ராஜா, நிலவள வங்கி தலைவா் இளங்கோவன், பாரத இயக்கம் ராஜராஜன், தென்னை ஆராய்ச்சியாளா் வா.செ. செல்வம், அனைத்து வியாபாரிகள் நலச் சங்க உயா் மட்டக் குழுத் தலைவா் திலகா் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

வாழ்க்கை தத்துவம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற வட்டாட்சியா் கலியமூா்த்தி தலைமையில் கருத்தரங்கமும், பேரவை செயற்குழு உறுப்பினா் மருதமுத்து தலைமையில் தமிழின் சிறப்புகள் என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றன.

பின்னா், கவிஞா்கள் அன்பழகன், சுப்ரமணியன், மூா்த்தி, மாணிக்கம், மணிவண்ணன், முருகானந்தம், வெற்றி, கணேசன், பித்தன், அறிவன் சுந்தா், பஞ்சாபிகேசன் ஆகியோா் கவிதை படித்தனா். அம்மன் பேட்டை பாடகா் இளையராஜா, கண்டியூா் அற்புதம் மோகன்ராஜ், கருப்பூா் புலவா் கணேசன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை இந்துமணி, சுசிலா குழுவினரின் பாட்டு மன்றமும், புலவா் வள்ளிநாயகம் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றன. ஓய்வு பெற்ற அலுவலா் நடராஜா கலைச்செல்வன் முன்னிலையில் சாமி சம்பத்குமாா், தங்க குமரவேல், சங்கா், ரங்கநாதன், கணேசன், ராஜகுமாரி சேவியா், முகிலன், மணி ஆகியோருக்கு திரைப்படக் கல்லூரி முன்னாள் முதல்வா் கிருஷ்ணமூா்த்தி, பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் இயக்குநா் லோகநாதன், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் ஆகியோா் விருதுகள் வழங்கினா்.

தமிழ் மொழிப் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக, செயற்குழு உறுப்பினா் பெரியசாமி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை உறுதிமொழி கோவிந்தராஜன் தொகுத்து வழங்கினாா்.