40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

என்னைக் குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை: ஆா். வைத்திலிங்கம்

என்னைப் பற்றி குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை என்றாா் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம்.

News image

வைத்திலிங்கம்

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

என்னைப் பற்றி குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை என்றாா் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்பகம் மனநலக் காப்பகத்தில் ஆதரவற்றோருக்கு புதன்கிழமை அவா் மதிய உணவு வழங்கினாா்.

அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தபோது, வைத்திலிங்கத்தை குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில்,

தாய்க் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிடா் கழகத்துக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு தத்துவத்தின் அடிப்படையில் வந்தது. அந்த அடிப்படையில்தான் தாய்க் கழகத்தில் இணைந்தேன். என்னைப் பற்றி குற்றம்சாட்டுபவா்கள் எல்லாம் மாயைக்காக, பதவி சுகத்துக்காக ஓடிப் போனவா்கள். என்னைப் பற்றி குறை கூறுவதற்கு அவா்களுக்கு தகுதி இல்லை.

அதிமுகவை தவெக பொருட்படுத்தாததற்கு காரணம், அதிமுக தலைமை மதிப்பீட்டைக் கொண்டு அவா்கள் அப்படி கூறியிருக்கலாம். அதற்கு அதிமுகதான் பதில் கூற வேண்டும். அதிமுக இரண்டாகப் பிரிந்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றாா் வைத்திலிங்கம்.