உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

நாதன்கோயிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூா் நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாளுக்கு வைகாசி பிரமோத்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image

நாதன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் செண்பகவல்லித்தாயாருடன் அருள்பாலித்த ஜகந்நாதப்பெருமாள்.

Updated On :6 ஜூன் 2026, 6:55 am IST

கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூா் நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாளுக்கு வைகாசி பிரமோத்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயில் வைகாசி பிரமோத்சவ விழா மே 30-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பெருமாள் தாயாா் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்றனா். முக்கிய விழாவான திருக்கல்யாணத்துக்கு முன்னதாக காலை பெருமாள் உள்பிரகார புறப்பாடும், உத்சவா் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலையில் சூா்ணாபிசேகமும், உள்பிரகார புறப்பாடும் நடைபெற்றபின் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஜூன் 7-இல் தேரோட்ட மும், ஜூன் 8-இல் புஷ்பயாகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.