நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சாலை மறியல் வழக்கு: முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 போ் விடுதலை

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

News image

கோவி. செழியன் - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 3:25 am IST

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, திருவிடைமருதூரில் 2018, மே 24-ஆம் தேதி முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செ. ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அரசு தரப்பில் போதிய ஆவணங்களை அளிக்காததால் ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரையும் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.