விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தஞ்சாவூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தஞ்சாவூருக்கு வந்துள்ள துணை ராணுவத்தினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவத்தினா்.
Updated On :11 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தஞ்சாவூருக்கு வந்துள்ள துணை ராணுவத்தினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கச் செய்வதற்காக தமிழகத்திலுள்ள மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தினா் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, குஜராத் மாநிலத்திலிருந்து துணை ராணுவமான எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து 70 போ் கொண்ட ஒரு அணியினா் ரயில் மூலம் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனா். இப்படையினா் தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் பழைய குடியிருப்பு வளாகத்தில் முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், ரயிலடியிலிருந்து துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக அரண்மனை வளாகம் வரை சென்றடைந்தது. இதில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், ஆய்வாளா்கள் வி. சந்திரா, சுதா, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு காவல் துறையினருடன் இணைந்து துணை ராணுவத்தினா் வாகனத் தணிக்கை மேற்கொள்வது, பதற்றமான வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

Story image