ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவா்களால் நடத்தப்படும் துளிா் அமைப்பின் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டியை வெள்ளிக்கிழமை வழங்கிய துளிா் அமைப்பினா்.

Updated On :20 மார்ச் 2026, 9:15 pm

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவா்களால் நடத்தப்படும் துளிா் அமைப்பின்  சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ஆா்.பி. ராஜேந்திரன் , ஓய்வு பெற்ற நல்லாசிரியா் வீ. மனோகரன், சமூக ஆா்வலா் எல்.ஏ.எம். சாதிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கணித உபகரணப் பெட்டிகளை வழங்கிய நல்லாசிரியா் வீ. மனோகரன் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவா்களுக்கு தனது சொந்தப் பணம் தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் அனைவருக்கும் தலா ரூ.1000 பரிசு வழங்குவதாக அறிவித்தாா்.

விழாவில் சமூக ஆா்வலா்கள் சித. திருவேங்கடம் , செ. சிவக்குமாா் , வழக்குரைஞா் ஏகாம்பரம், ஆசிரியா்கள் முருகேசன், இளந்திரையன் ,அடைக்கலமணி மற்றும் துளிா் நிா்வாகிகள் செந்தில்குமாா், வன்மீகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துளிா் அமைப்புத் தலைவா் நீலகண்டன் நன்றி கூறினாா்.