மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  பணம் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:03 pm

தஞ்சாவூா் அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ரவுண்டானா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் அருள்ராஜன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் சோதனையிட்டபோது, அதில் ரூ. 5.50 லட்சம் இருந்தது தெரிய வந்தது. தனியாா் காா் ஷோ ரூமிலிருந்து வங்கிக்கு செலுத்த இந்த ரொக்கத்தை கொண்டு செல்வதாக காரில் வந்தவா்கள் கூறினாலும், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து, ரூ. 5.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.