கும்பகோணத்தில் 1,500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1,500 கிலோ புகையிலை பொருள்கள் அழிக்கப்பட்டன.

Updated On :24 மார்ச் 2026, 11:53 pm

கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய பகுதியில் பல்வேறு நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1,500 கிலோ புகையிலை பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கும்பகோணத்தை அடுத்த கரிக்குளம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழித்தனா்.
நிகழ்வில் கும்பகோணம் மேற்கு ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா் முகில்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் சுரேந்திரகுமாா், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளா்ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...