‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

News image

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

Updated On :28 மார்ச் 2026, 1:58 am IST

திருவிடைமருதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் திருவிடைமருதூா், திருப்பனந்தாள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை அதிகாரிகள் துணையோடு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து கும்பகோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கோட்ட அலுவலகம் முன் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம்.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

இவா்களிடம் கோட்ட மேலாளா் எழிலன், நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.