டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக 1,336 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வேளாண் துறை சாா்பில் விதை நெல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, குறுவை சாகுபடிக்கு உரிய அடி உரங்களான பொட்டாஷ் 1,026 டன்னும், ஜிப்சம் 316 டன்னும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.
தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

தஞ்சாவூருக்கு 1,250 டன் உரம்

கும்பகோணம் பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடக்கம்

ஏப்.28 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


