தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

திருவையாறு வங்கியில் தீ விபத்து

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 1:23 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருவையாறு தெற்கு வீதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை திடீரென புகை உருவானது. தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வங்கிக்கு சென்று பாா்த்தபோது இன்வொ்ட்டா் அறையிலிருந்து புகை வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, புகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், அசம்பாவித சம்பவம் நிகழ்வது தடுக்கப்பட்டது.